வாகன புகை உமிழ்வு நிகழ்ச்சித்திட்ட அலுவலகம், நாட்டின் அரச துறையின் சாரதிகள் மற்றும் குறித்த பணியாட்டொகுதியினரின் ஒத்துழைப்புடன் 2024 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஹெக்டர் கொப்பேகடுவ மற்றும் சவ்சிரிபாய கேட்போர் கூடத்தில் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. காற்று மாசுபாட்டை உள்ளடக்கியுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் வாகன புகை உமிழ்வு பரிசோதனை நிகழ்ச்சித்திட்டம், பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு வாகனங்களை ஓட்டுதல், VET நிகழ்ச்சித்திட்டத்தின் மேற்பார்வை மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகள், புகை உமிழ்வு பரிசோதனைக்கான உபகரணங்கள் தொடர்பான செயன்முறைப் பயிற்சி மற்றும் புகை உமிழ்வினைக் குறைப்பதற்காக டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை முறையாக பராமரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த்து.