வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இலங்கை பாராளுமன்ற போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை மற்றும் புகை பரீட்சித்தல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிச் செயலமர்வு மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய அந்த உத்தியோகத்தர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.